” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 270——நடிப்பு

ஆளுவோர் யார் என்ற தேர்தல்
ஐந்தாண்டுக் ஒருமுறை
தேர்வில்
வாழ் இடம் இதில் எம்முள்
ஒருத்தி
தொழில்கட்சி போட்டியில்
இருத்தி.

அவர்களின் கட்சியோ
வேறு
ஆனாலும் இனமென்ற
வீறு
இருப்பவர் நண்பர் எம்
பா.உ
இவரை எதிர்பவர் என் ஊர்
நாடு

வீடு வீடாய் துண்டை
போடு
வந்து சந்திக்க வா என்
ணோடு
போடுறார் தொலை செய்தி
அழைப்பு
போக கால் ஏவாது நானோ
தவிப்பு

நடிப்பதே ஒரேஒரு
மார்க்கம்
நானோ விடுப்பில் சுகவீன
சாக்கில்
மிடுக்குடன் என் நாட்டை
ஆண்டார்
மீள நம் நேரம் அவர் மண்
ஆள்வோம்
-எல்லாளன்
லண்டன்-

Nada Mohan
Author: Nada Mohan