11
Jun
ஆக்கங்களின் பிறப்பிடம்
எழுத்தாளர் கரம் தொட்டு
உருவாகும் ஓர் ஆக்கம்
ஆண்டுகள் பல கடந்தும் தீரவில்லை ஊக்கம்
சிந்தனையை...
வசந்தா ஜெகதீசன்…
ஒற்றைச் சொல்லின் ஓங்காரம்
உலகாய் விரியும் ஓம் வார்த்தை
உடலும் உள்ளமும் மெருகு பெறும்
ஓமெனும் ஒலியே அடிநாதம்
அழகுற எம்மைச் செதுக்கி வைக்கும்
அமைதியை உளத்தில் நிலைக்க வைக்கும்
அரோக்கியத்தின் வழித்துணையாய்
ஆழ ஒலிப்போம் ஓம் ஒலியை
எம்மைச் சூழும் கவலைகளும்
எண்ணற்ற சிந்தை ஓட்டங்களும்
மனதைத் தாக்காது அமைதி பெற
ஆளும் ஆற்றல் ஓம் ஒலிக்கு
பல்துறை நாட்டார் நாட்டமுடன்
பயன்பெறும் யோகவழி நிலையே
ஓம் ஒலிக்கு முதன்மை நிலை
ஓங்கார வடிவின் ஒற்றை வரி!
நன்றி
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.