ஒற்றைச் சொல்லில் …

வசந்தா ஜெகதீசன்…
ஒற்றைச் சொல்லின் ஓங்காரம்
உலகாய் விரியும் ஓம் வார்த்தை
உடலும் உள்ளமும் மெருகு பெறும்
ஓமெனும் ஒலியே அடிநாதம்

அழகுற எம்மைச் செதுக்கி வைக்கும்
அமைதியை உளத்தில் நிலைக்க வைக்கும்
அரோக்கியத்தின் வழித்துணையாய்
ஆழ ஒலிப்போம் ஓம் ஒலியை

எம்மைச் சூழும் கவலைகளும்
எண்ணற்ற சிந்தை ஓட்டங்களும்
மனதைத் தாக்காது அமைதி பெற
ஆளும் ஆற்றல் ஓம் ஒலிக்கு

பல்துறை நாட்டார் நாட்டமுடன்
பயன்பெறும் யோகவழி நிலையே
ஓம் ஒலிக்கு முதன்மை நிலை
ஓங்கார வடிவின் ஒற்றை வரி!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

Continue reading