” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஒலிம்பிக் ஒளியில்

நேவிஸ் பிலிப் கவி இல (143) 08/08/24

ஏதென்ஸ் நகர் தொடங்கி
நாடு நகரம் சுற்றி பிரன்ஸ் நாட்டினிலே
முலூஸ் , பரிஸ் வதியும்
இரு ஈழத் தமிழரின் கரங்களிலே
பெருமையுடன் பவனி வந்த
ஒலிம்பிக்கின் ஒளிச் சுடர்
பிரகாசமாய் ஒளிரும் பரி்ஸ் நகர்

திறந்த வெளி அரங்கினிலே
வரவேற்பே கோலாகலமாய்
செய்ன் நதியினிலே படகுப் பவனி
அசைந்த கொடிகளில்
நாடுகளின் அறிமுகம்
களிப்போடு கண்டோர் பல இலட்சம்

நகருக்குள்ளே ஒளிர்கின்ற சிறு கிராமம்
பங்கேற்கும் வீரர்களின் உறைவிடமாய்
அடிப்படைத் தேவைகள்
அனைத்துமாங்கே சிறப்போடு
அமைத்திருக்கு

புதுமைகள் புகுந்தது
ஆணும் பெண்ணும் சமமெனவே
துணிச்சலுடன் களமிறங்கி
வீர தீர விளையாட்டுக்கள்
ஆடுகின்ற வேகம்
வென்றெடுக்கும் தாகம்

உற்சாக கூச்சல்கள்
அரங்கம் அதிரும் கரவொலிகள்
நாடுகள் இணைய சமத்துவம் மலர
பார்ப்போர் மனங்கள் மகிழ்வு கொள்ளுது.

Nada Mohan
Author: Nada Mohan