ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

ஒளவை

நட்பு
———
உள்ளத்தை ஒழிக்காது
உண்மை உரைக்கவும்
பள்ளிக் காலத்தில்
பலதைப் பகிரவும்
கள்ளம் செய்தாலும்
காவலாய் நிற்கவும்
வெள்ளை மனதாய்
வேண்டும் நட்பு

உதிரத்தில் வேறாயினும்
உடன்வரும் சொந்தம்
பதிலேதும் கேட்காமல்
பாசத்தைக் காட்டிடும்
எதிலுமே துணையாய்
என்றென்றும் தொடரும்
நதிமூலம் ரிசிமூலம்
நட்புக்கும் இல்லை

கர்வத்தை உருவமாய்க்
கொண்ட துரியனும்
கர்ணனின் நட்பில்
கண்ணியம் காத்தான்
கண்ணனின் நட்போ
குசேலனின் தகுதியை
எண்ணத்தில் என்றும்
ஏற்றியே வைத்தது

சாதி மதங்கள்
சங்கடம் தரினும்
வீதிக்கு வீதி
வேற்றுமை இருப்பினும்
நாதி அற்றவனுக்கும்
நல்நட்புக் கிடைத்திடின்
சாதித்துக் காட்டிச்
சான்றாய் நிற்பான்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading