09
Jul
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
09
Jul
நடிப்பு
சக்தி சிறினிசங்கர்
அன்பினைக் காட்டுவர் அசந்திட வைப்பர்
உதட்டிலே சிரிப்பு உள்ளத்திலே கசப்பு
முகத்திலே வெளிச்சம்...
09
Jul
உலகக் கோப்பைத் திருவிழா
கவிதை 809
புற்தரை மேலே ஒரு போர்க்களம்
அங்கு கோல் ஒன்றை விழுத்த,
பந்தை...
ஒளவை
நட்பு
———
உள்ளத்தை ஒழிக்காது
உண்மை உரைக்கவும்
பள்ளிக் காலத்தில்
பலதைப் பகிரவும்
கள்ளம் செய்தாலும்
காவலாய் நிற்கவும்
வெள்ளை மனதாய்
வேண்டும் நட்பு
உதிரத்தில் வேறாயினும்
உடன்வரும் சொந்தம்
பதிலேதும் கேட்காமல்
பாசத்தைக் காட்டிடும்
எதிலுமே துணையாய்
என்றென்றும் தொடரும்
நதிமூலம் ரிசிமூலம்
நட்புக்கும் இல்லை
கர்வத்தை உருவமாய்க்
கொண்ட துரியனும்
கர்ணனின் நட்பில்
கண்ணியம் காத்தான்
கண்ணனின் நட்போ
குசேலனின் தகுதியை
எண்ணத்தில் என்றும்
ஏற்றியே வைத்தது
சாதி மதங்கள்
சங்கடம் தரினும்
வீதிக்கு வீதி
வேற்றுமை இருப்பினும்
நாதி அற்றவனுக்கும்
நல்நட்புக் கிடைத்திடின்
சாதித்துக் காட்டிச்
சான்றாய் நிற்பான்.
ஔவை.
Author: Nada Mohan
08
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
நட்பு
நாணயம் தவறாத நல்லநட்பு வேண்டுமடா
பணத்தாசை கொண்டே பாழாக்கும் எண்ணமின்றி
உயிராக இருக்கும் உன்னத...
08
Jul
செல்வி நித்தியானந்தன்
நட்பு
எதிர்பார்பு இன்றியே
எல்லை தாண்டியே
எண்ணற்ற பாசமாய்
ஏங்கிடும் நட்பாய்
வயது மொழி நாடு
பார்க்காத...
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...