ஒளவை

என்னவள்……
=============
அழகில் அவளை
அரசியாய்க் கண்டேன்
பழகியே அவளில்
பாசமும் கொண்டேன்
நிலவினைப் போல
நிம்மதி தந்தாள்
விலகிட முடியா
வீரமுடன் நின்றேன்

பருவ வயது
பளிச்சிடும் தேகம்
கருவிழி இரண்டும்
காதலைத் தூண்டும்
அருவியாய்ப் பாயும்
அவளது பார்வையில்
உருகியே வீழ்ந்தேன்
உண்மைக் காதலில்

அரும்பு மீசையில்
அலையும் இளசுகள்
தெருவோரம் நின்று
தேம்பியே பார்த்துக்
கருகிய காதலைக்
கண்ணீரால் மறைக்க
விரும்பியது கிடைத்த
வீராப்பு எனக்கு

மனதில் உன்னை
மனைவியாய் ஏற்றேன்
தினமும் காத்திடும்
தெய்வமாய் இருப்பேன்
மனையில் எனக்கு
மகாராணி நீயே
உனைத் தென்றல்
தீண்டவும் விடேன்.

ஒளவை.

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading