ஒவ்வாமை 671 Selvi Nithianandan

Selvi Nithianandan

ஒவ்வாமை
சுட்டெரிக்கும் வெய்யிலும்
சுழன்றடிக்கும் காற்றும்
சுற்றுச்சுழல் மாசும்
சுழளும் ஒவ்வாமையும்
சுண்டித்தானே இழுக்குதே

சுகமாய் நானிருந்தும்
சுருண்டு போகையில்
சுதந்திர மழையும்
சுடர்விடும் திரிபோல
சிவக்குது கண்ணும்

மூச்சடைப்பு முகமெரிவு
இருமலுடன் தும்மல்
இதெல்லாம் தாண்டி
இடர்படும் கவலையும்
இப்படியே போகுது

ஓராண்டு வேலை
ஒருமாத காலம்
விடுமுறை மோகம்
விற்றமீனும் காணா
விடியலாய் தாகம்

கால்வீக்கம் ஒருபுறம்
கண்பிரச்சனை மறுபுறம்
காலம் தான்பதில் கூற
காத்திருப்பாய் நானும்
காத்திருப்பாய் நானும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading