இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

ஓடும் வெண்ணிலவே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

30.01.25
ஆக்கம் 176
ஓடும் வெண்ணிலவே

வெண்ணிலவே
வெண்ணிலவே
விரைந்து ஏன்
ஓடுகின்றாய் ?

உன்னைத் தொட்டு
விடலாம் என்றல்லவோ
நானும் எட்டி எட்டி
நடக்கின்றேனே
நீயோ யாரும் தொட்டு
விடக் கூடாது என்று
வெட்டி வெட்டிப் போவதும் சரிதானோ

ஒரு சிலவேளை சீவிச்
சிங்காரித்து சிரித்தபடி
அழகு தேவதை போல்
வருகின்றாய்
சில நேரம் அழுத முகமுடன் அரைகுறை
ஆகத் திரிகின்றாய்

உனது அழகில் சொக்கி
நிற்கும் மாந்தரை விட்டு விட்டு ஓடிச் செல்வதும்
முறைதானோ ?

நீள்வான வெளியில்
மெல்ல மெல்ல நகர்ந்து
சென்று உன் அழகில் மயங்க வைக்கத் துரத்திச் செல்லும் சூரிய மன்னனோ உன்
வலையில் சிக்கக்
கூடாதென்று கீழ்
வானத்தில் உன் பார்வை படாது மறைந்து கொண்டதால்
அழுது முகம் சிவந்து
அரைகுறையானாயோ?

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading