முயற்சியே பலம் முனைப்பே திடம்

செல்வி நித்தியானந்தன் முயற்சியே பலம் முனைப்பே திடம் மானிட பிறப்பின் மகத்தான பலமே மனஉறுதி என்றுமே திடமான முனைப்பே முயற்சியின் பயனே முற்றிலும்...

Continue reading

பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

ஔவை

கற்றவர் இயல்பு
===============

அற்புத வாய்ப்பை அனைவர்க்கும் காட்டுவர்
வெற்றிப் பொழுதிலும் வேறாகார் – கற்றவரே
நற்றுணை போலே நலமுடன் வாழ்ந்திடப்
பெற்றுத் தருவரே பேறு.

பெற்றவர் போற்றிப் பெருமையும் கொள்ளவே
உற்றவர் என்றும் உவகையுறக் -கற்றவரே
நற்சான்று பெற்றிடுவர் நாளும் உலகிலே
வெற்றியே கிட்டிடும் வாழ்வு.

சிற்றின்ப வாழ்வில் சிறப்புடன் ஓங்கிட
வற்றாத இன்பம் வளம்சேர்க்கும் -கற்றவரே
குற்றம் களைந்து குடும்பம் நடத்துவர்
நற்பண்பில் ஓங்குமே நாடு.

வற்றாத ஊற்றாய் வளம்தரும் நீராக
நற்செயல் செய்திட நாடுவர் – கற்றவரே
வெற்றியை நோக்கியே வென்றிட வைத்திடப்
பற்றி இழுப்பரே பார்.

ஔவை.

Nada Mohan
Author: Nada Mohan