கொழுத்தும் வெம்மை

வியாழன் கவி -2357 “கொழுத்தும் வெம்மை” ஐரோப்பா எங்கிலும் அதீத வெப்பத்தின் மிரட்சி அந்தோ பரிதாபம் புழுவாய்த் துடிக்கும் மனிதம் அப்பப்போ...

Continue reading

……கஞ்சா

மதிமகன்

……..கஞ்சா
———————
தலைக் கஞ்சா தலைவனும்,
தானைக் கஞ்சா சிப்பாயும்,
நிலைக் கஞ்சா நிலத்தோனும்,
நிம்மதி என்றும் இழப்பதில்லை!

மணாளனுக் கஞ்சா மனைவியும்,
மனைவிக் கஞ்சா மணாளனும்,
குணவானுக் கஞ்சா கொடூரனும்,
கூடிடில், கோணுமே நிம்மதி!

பெற்றோர்க் கஞ்சா பிள்ளையும்,
பெரியோர்க் கஞ்சா சிறியோனும்,
கற்றோர்க் கஞ்சா காடையனும்,
காசினியில் நஞ்சென வருமே!

அஞ்சுதற் கஞ்சா அறிவிலியும்,
ஆண்டவனுக் கஞ்சா அடியவனும்,
வெஞ்சமர்க் கஞ்சா வெறியோனும்,
வீழ்வதே பாரதன் விழுமியமாம்!

ஊருக் கஞ்சா உடையோரும்,
உணர்வுக் கஞ்சா உன்மத்தரும்,
போருக் கஞ்சா படையோரும்,
பொருதிடில், பூமியே துவளும்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading