கணப்பொழுதில்…

வசந்தா ஜெகதீசன
நொடிக்குள் நொடியாய் நொடிந்ததே கனவு
நொடிப் பொழுதில் அகோர நினைவு
ஏக்கத்தில் இன்னமும் இருட்டு
எப்படி நிகழ்ந்தது விபத்து
பற்பல கனவுடன் பறந்திட்ட உறவுகள்
பாதியில் வீழ்ந்த இடியாய் தகர்ப்பு
சுற்றுச் சூழலே சுக்குநூறானதே
மருத்துவ மாணவர் மாண்டிட நேர்ந்தது
இறப்பின் துடிப்பே வதையின் ரணமாய்
இதுபோல் வேண்டாம் இன்னலின் துயர்கள்
கதறும் உறவுகள் கண்ணீர் அவலம்
பணியாளர் பணியும் பரிதாப இழப்பு
நினைக்க முடியாத நிமிடத்தின் தகர்ப்பு
உயிரின் வதையே உலகை உலுக்குது
உறவுகள் கதறல் உளத்தையே வாட்டுது
நிகழ்ந்த கணமே நிஜமா கனவா
கணப்பொழுதே காலக்கணக்கு!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading