ஆளுகின்றான் அடிபணிகின்றோம்..!!

வியாழன்கவி 2300!! ஆளுகின்றான் அடிபணிகிறோம்!! வாழுகின்ற வாழ்க்கையிலே வழி நெடுக பயணிப்பான் ஆளுகின்ற அழுத்தக்காரன் வீழ்ந்திடுவான் உழைப்பாலே சோம்பலென்று கிடந்தாலோ தூரம்...

Continue reading

வரமாகும் வாய்ப்புக்களே

இரா.விஜயகௌரி வரமாகும் வாய்ப்புக்கள் அவை தடமாகும் செயல் தழுவின் உரமாய் நாம் பயன்கொள்ளின் உரைத்தெழுதும் நம் தடங்கள் வாய்த்ததெல்லாம்...

Continue reading

கனவான காதல்

கனவென வந்தாய் மனம் நனைய,
நினைவென நின்றாய் கன்ணம் நனைய
உறவென சொன்னாய் உயிர் மகிழ
பிரிவென செய்தாய் உளம் நெகிழ

உன் புன்னகையை சேமித்துக் கொண்டேனடி
உன் நிழலையும் காதலிக்க செய்தேனடி
கண்ணிலே வளர்ந்த காதலோ அன்று
எண்ணத்தை மாற்றி போனதேன் இன்று

சிரிப்பின் முகமூடி நாளுக்குள் அணிந்தபடி
பிரிவின் அழுகையை நான் சுமந்தபடி
உன் நினைவோ என்னைக் கொல்ல
கண்ணீரின் தத்துப்பிள்ளையானதை யாரிடம் சொல்ல

தோல்வி என்பது எனக்கு பழகியதே
வாழ்வோடு கூடாது காதலும் விலகியதே
நிஜமென நினைத்தது நிழலென ஆனது
மயக்கம் தீர்ந்தது காதலும் வீணது

ஜெயம்
09-02-2026

Author: