” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

கனவான காதல் 85

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-02-2026

மூன்று மாடிக் கட்டடத்தில்
முன்வருபவர் யாரென அறியாமல்
சாளரம் வழிச் சாலையை வெறித்துச்
சாய்ந்திருந்தாள் ஒரு சுந்தரி!

பெற்றோரின் காதலா? இல்லை
உடன்பிறந்தோர் பாசமா?
உறவுகளின் காதலா? இல்லை
ஊரின்மேல் கொண்ட ஏக்கமா.?

ஏனிந்த மௌனம்? ஏன் தானோ ஏக்கம்?
நெஞ்சம் கொஞ்சம் கனக்கிறது…
நேசமேதும் அருகில் அற்று
நெருங்கும் உறவும் யாருமற்று!

பேதையாகி நின்றவளைத் தாதி
பெரும் மனதோடு கட்டியணைத்து,
மீட்டெடுத்தாள் புன்னகையால் – அவள்
விரல் நுனியின் நாடித்துடிப்பால்!

காலங்களும் காட்சிகளும் மாற,
கனவான காதலும் வலித்திட…
மரண வாசலில் நின்றோரும் – இன்று
உயிர் மீட்பது பாச மொழி!

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading