கமலா ஜெயபாலன்

முள்ளி வாய்க்கால்
—————————
வந்தாரை வரவேற்கும் வன்னி மண்ணே
வருத்தங்கள் பலகண்டு வாட்ட முற்றாய்
பந்தங்கள் தொலைத்து பட்டதுன்பம் யாரறிவார்
பரிதாபம் என்பார்கள் பட்டது நம்மினமே

கல்லால் அடித்தாலும் கரையாத பெரியம்மா
செல்லால் அடிபட்டுச் சிதைந்தாவே குடும்பமாய்
எத்தனை இழப்புக்கள் என்னவென்று சொல்லுவது
இன்றும் வருவாரென்று ஏங்குவோர் எத்தனைபேர்

உருவம் தெரியாமல் உடலும் கிடையாமல்
உலர்ந்த மணலில் புதைபட்ட உறவுகள்
இரக்கம் அற்ற இச்செயலால் என்னபலன்
உண்மைகள் மறையாது ஒருநாள் தெரியும்
கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading