கமலா ஜெயபாலன்

தலையீடு
இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும்
இதனால் பலரின் இதயம் நொருங்கிடும்
குடும்பச் சண்டை கொஞ்ச நேரம்
குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம்

நன்மை என்று நாமும் நினைத்து
நாடி ஓட நாணயம் பேசி
தன்னை மறந்து தலைவர் ஆகியும்
தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது

அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான்
அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு
தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும்
தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு

உன்னைப் போலவே உலகினை நேசி
உண்மை விளங்கும் உள்ளிடும் போதே
அன்பில் அகிலம் அரண்டு போக
ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு!

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading