“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா வியாழன் கவிதை நேரம்..!! கவி-2161 “தாயுமானவர்”.. தாயுக்கும் தாயாகி சேயுக்கும் தாயாகித் தரணியிலே முதலானவர் தந்தை எனும் அற்புதமே.. கருவாகி உருவாகக் காரணி...

Continue reading

கமலா ஜெயபாலன்

தலையீடு
இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும்
இதனால் பலரின் இதயம் நொருங்கிடும்
குடும்பச் சண்டை கொஞ்ச நேரம்
குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம்

நன்மை என்று நாமும் நினைத்து
நாடி ஓட நாணயம் பேசி
தன்னை மறந்து தலைவர் ஆகியும்
தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது

அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான்
அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு
தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும்
தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு

உன்னைப் போலவே உலகினை நேசி
உண்மை விளங்கும் உள்ளிடும் போதே
அன்பில் அகிலம் அரண்டு போக
ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு!

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan