கமலா ஜெயபாலன்

தலையீடு
இலவசமாக கிடைக்கும் இடைஞ்சல் தந்திடும்
இதனால் பலரின் இதயம் நொருங்கிடும்
குடும்பச் சண்டை கொஞ்ச நேரம்
குறுக்கிடும் கூனியால் குழம்பும் குவலயம்

நன்மை என்று நாமும் நினைத்து
நாடி ஓட நாணயம் பேசி
தன்னை மறந்து தலைவர் ஆகியும்
தலையைக் நுழைத்து தன்மானம் இழக்காது

அவனவன் வேலையை அவனவன் பார்ப்பான்
அடுத்தவன் ஏனோ அவசர நுழைவு
தவமான வாழ்வில் தன்னிறைவு வேண்டும்
தலையீடும் இல்லையேல் தரமாகும் வாழ்வு

உன்னைப் போலவே உலகினை நேசி
உண்மை விளங்கும் உள்ளிடும் போதே
அன்பில் அகிலம் அரண்டு போக
ஆறுதலாய் இருப்போம் அடுத்த தலைமுறைக்கு!

கமலா ஜெயபாலன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading