சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

கவிஞனின் ஆயுதம்
——————————
பாரினில் பாவலர்
பாடிய பாடல்கள்
வேரினும் ஆழமாய்
வேகமாய் ஊன்றும்
காரிருள் ஆனாலும்
கவிஞனின் எழுதுகோல்
கூரிய முனையால்
கீறிடும் வலிமையாய்/

செந்தழிழ் கொண்டு
செதுக்கிய ஆயுதம்
சந்துகள் ஓடிச்
சரித்திரம் படைக்க
எந்தனை ஆளும்
இன்பத் தழிழை
வந்தனை செய்துமே
வாழ்த்தி வரைவோம்/

பாரதியரும் பரதிதாசனும்
பதமாய் எழுதியே
வீரகாவியம் படைத்த
விந்தையும் கண்டோம்
தீரமன சிந்தனையோடு
தந்திடும் கருத்தும்
காரமாகி உரைத்துடும்
கருத்தை உணர்வாய்/

எண்ணத்தை எழுத்தாக்கி
இதையத்தை கல்லாக்கி
வண்ணத்தை வரிகளாக்கி
வார்த்தைகளை தீயாகி
விண்ணுலகம் போற்றும்
வீரனின் எழுதகோல்
கண்ணிற்குள் மணியாய்
காக்குமே கவிஞரை/

Nada Mohan
Author: Nada Mohan