பெருவலி சுமந்த பேரிடர்……

ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026 மேபதினெட்டு மேதினியின் கரிநாள் பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள் வெறும்...

Continue reading

கமலா ஜெயபாலன்

பழமை
ஓடியல் கூழும் உளுத்தம்மாப் பிட்டும்
ஒன்றாய்ச் சேர்ந்து உண்ட காலம்
பாண்டியும் பம்பரமும் பண்புடனே ஆடியும்
பாசம் வளர்த்த பரம்பரைகள் நேசம்
குப்பி விளக்கில் குனிந்து படித்த
குதுகலமும் நெஞ்சு இனிக்கும் நினைவுகள்
மாட்டு வண்டிச் சவாரியும் சலங்கையும்
மாமன் வாங்கித்தந்த மத்தாப்பு வெடியும்
ஏர்பூட்டி வயலுழும் எருது மாடுகளும்
ஏங்கினாலும் காண்போமோ இனியொரு காலத்தில்
தொழில் நுட்பம் விஞ்ஞானம் தோன்றியும்
தோன்றாத நோயெல்லாம் தோன்றிய போதிலும்
பாட்டி சொன்ன பழமை வயித்தியம்
புதுமையைக் கண்டது தீரா நோயில்
மாறாத மரபது குண்டு மணியாய்
குப்பையில் கிடந்தாலும் நின்று நிலைத்திடும்
குவலயத்தில் தூண்ட மணி விளக்காய் /

Nada Mohan
Author: Nada Mohan