Jeya Nadesan

தாய்க்கும் பிள்ளைக்கும் தலைவனார் தாயுமானவர் குடும்பத்தில் முதல் தலைவனாவர் உழைப்பால் மிகவும் உயர்ந்தவர் தந்தை எனும் உயர் மனிதரே பிள்ளைகளின்...

Continue reading

கரை தெரியுமா உனக்கு

கரை தெரியுமா உனக்கு

கடலுக்கு கரையுண்டு மனதிற்கு கரையில்லை

கடந்தபாதையில் செய்த கடமையும் என்னவோ

விளலுக்கு இறைக்கும் நிலையான கொள்கைகள்

களமாக நின்று கயமமான ஓட்டங்கள்

எங்கே மனிதம் ஏனிந்த ஏமாற்றம்

எந்தவிடத்திலும் நீதிக்கோ பெரும் போராட்டம்

வாழ்வின் பயணம் பாதையும் தெரியாமல்

வதைபட்டு சிதையும் வனிதைகள் எத்தனைபேர்

பதைபதைக்கும் பாவிகள் பருதவிக்கும் சூழ்நிலையில்

கதையெழுதுவார் கண்ணியம் கற்புடமை என்றெல்லாம்

கதாநாயகனை வர்ணிக்கும் அழகிலே மயங்குவார்கள்

கருவைக்கலைக்கும் வாழ்வியலில் வடிக்கும் கண்ணீர்

கலங்கிக் கொள்ளும் காமுகரின் லீலைகள்

கட்டுடல் சீர்குலைய களங்கம் சுமப்பார்கள்
வேலைதேடும் பயணத்தால் வருமே விபரீதங்கள்

கரைகாண வேண்டும் கயமையை அழித்தெறிவதற்கு…

Nada Mohan
Author: Nada Mohan