மாசற்ற உலகே நோயற்ற வாழ்வு……

இரா விஜயகௌரி இனிதாம் வாழ்வியல் பயணத்தொடரில் இடரெனச் சூழ்ந்திடும் நோயின் தொடுப்பு காற்றினில் மூச்சாய் கலந்திடும் கிருமி உள்துளைபுகுந்து...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலைப்பு பாமுக பூக்கள்

வண்ண வண்ண பூக்களே வாழ்த்துக்கள் பூக்களே
எண்ணமெங்கும் பாக்களே
எழிலோவியப் பூக்களே

நான்கைந்து மலர்களும் நறுமணப் பூக்களே
தோன்றலின் எண்ணங்கள் தோரண விழாக்களே

சின்னசின்ன ஆசைகள் சிறகடித்து பறந்தன புன்னகை சிந்தியே புகலிடம் பூண்டன

அரும்பாகி மொட்டாகி அழகிய மலராகி கருவாகி உருவாகி கவிதைகள் நூலாகி

உள்ளத்தில் ஊற்றாகி உதித்தன படைப்பாகி
தெள்ளிய ஞானத்தால் தித்திப்பு இல்லத்தில்

பாமுக பூக்களை பாரினில் உயர்த்திடும் நான்முகன் பூசத்தில் நாற்றிசையும் போற்றட்டும்

இருபது பலவாகி இலக்கத்தில் உயர்வாகி பெருகட்டும் உறவுகளே பெருமகிழ்வு கொள்வோமே

நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading