கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு – பணி

பணிச்சுமை என்னை பாடாய் படுத்திட துணிந்த நானும் துவண்டு விழுந்திட அல்லும் பகலும்
அயரா யுத்தமே நல்வினை புரிந்திட
நாள்கிழமை இல்லையே

அதிகாலை எட்டரை அந்திப்பொழுது ஐந்தரை
விதியென உழைத்துவிட்டு
வீடுவர வருத்தமே

ஏழுவரை மாலைவகுப்பு
என்சொல்வேன் என்விதியை அழுவதற்கும் நேரமில்லை அலைபாயுதே என்மனமே

இல்லத்தில்
தொடர்பணி
இரவு ஒன்றே இடைவெளி

செல்லமாய் குழந்தையுடன் செலவிடவும் நேரமில்லை

பத்தரைமணி ஓய்வில் பக்கத்தில் எழுதுகோல் நித்திரையில் தலைகவிழ்ந்து நினைவிழந்து துயில் கொள்வேன்

நிற்பதற்கும் நேரமில்லை
நிதானித்து எழுதுவதற்கும் ஓய்வுஇல்லை

சொற்பநேரம் உறவாடி
சொந்தம் கொண்டு
சந்தம் சிந்த
ஆவல் கொண்டேன்

🙏🏻நன்றி வணக்கம்🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading