” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு அம்மா

அம்மா அம்மா என்றே அனுதினமும் அருகில் நின்றே
சும்மா சும்மா கட்டி சுகமாய் முத்தம் தந்தே நிம்மதி உந்தன் மடியில் நித்தம் தலையை சாய்க்க
சம்மதம் தந்ததாலே நான்
சரித்திர மனிதன் ஆனேன்
எம்மை ஏற்றி வைத்த
ஏணிப் படியும் நீயே உம்மை இன்றி எனக்கு வேறுலகம் உண்டோ கூறு
நம்பி வைத்தேன் உன்னில்
நலமுடன் நூறு வாழ தும்பிக்கை பலமும் கொண்டவர்
துணிவும் வீரமும் நிறைந்தவர்
அம்மா துன்பமென்ன நேர்ந்ததோ
துணை இன்றி தனியே ஊர்வலம்
அம்பிகை போன்று வாழ்ந்த
அன்புதெய்வம் ஆறுதல் கண்டீரோ😭😭😭

நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பிற்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

மதிப்பு குறிய சகோதரர் பாவை அண்ணா அவர்களுக்குவணக்கம் நீண்ட இடைவெளியினை விட்டு மீண்டும் தொடரும் தங்கள் ரசிகையாகிய நான் தங்களது அயராத உழைப்பினை கண்டு வியந்ததுண்டு எறும்பாய் உழைக்கும் தங்கள் முன் ஒரு சிறு துரும்பாய் இருக்க விரும்புகின்றேன்
நன்றி பாவைஅண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

Nada Mohan
Author: Nada Mohan