கவிதை நேரம்-29.08.2024 கவி இலக்கம்-1905 வாழ்க்கை தத்துவம் ——————-

Jeya Nadesan

கவிதை நேரம்-29.08.2024
கவி இலக்கம்-1905
வாழ்க்கை தத்துவம்
——————–
ஒவ்வொரு நாளும் இளமை கழிகிறது
மூப்பு வந்து முதுமை கூடுகிறது
காலம் என்பது நம் கையில் இல்லை
காலத்தின் கையில் மனிதன் இல்லை
தலைமுடி நரையாகிறது பார்வை மங்கிறது
முகச் சுருக்கம் உடல் வலிமை குறைகிறது
நடக்க முடியாத நிலையில் கைத்தடி
கஸ்டங்கள் வரும் போதுதான்
கடவுளை நினைத்து நொந்து கொள்கிறது
மருத்துவமனையில் இருக்கும் போதுதான்
ஆரோக்கியம் அவசியம் நினைப்பதுண்டு
ஓடி ஓடி உழைத்து பிள்ளைகளுக்கென
நொந்து நூலாகி தெருவில் திரியும் காலம்
சொகுசான வாழ்வில் பிள்ளைகள் வாழ்வும்
ஆறுதல் சொல்ல எவருமில்லா நிலையில்
மனம் வருந்தும்படி வயதானவர்கள் ஆதங்கம்

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading