பண்படுமோ பண்பாடு 759 23.04.2026

செல்வி நித்தியானந்தன் பண்படுமோ பண்பாடு மண்ணிலே பண்பாட்டால் பலருக்கு வேதனை பகுத்தறிவு தொலைத்து பணமழிக்கும் போதனை பள்ளியில்...

Continue reading

கவிதை 238 நம்பிக்கை

இ.உருத்திரேஸ்வரன்

ஒவ்வொரு உயிருள்ளும் இருக்கும் சக்தி
இதை கை விட்டால் இரண்டாகும் மனம்
சுயமாய் எழுந்திட நம்பிக்கை கொண்டு
காலடி எடுத்துவை முன்னேற்றப்பாதையிலே

கடப்பாரை கொண்டு கிணறு
தோண்டலாம் நம்பிக்கை இருந்தால்
சறுக்கி விடும் பாதை எல்லாம்
வெற்றிப்படியாய் மாற்றிடுமே நம்பிக்கை

இது இன்றி வாழ்க்கை இல்லை
கடக்க வைக்கும் உன்னை எல்லைவரை
இதை நம்பி வெற்றியுடன் நடைபோடு
அதுவே வாழ்வின் முன்னேற்றம்

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading