ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கானமயில் -75

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025

பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!

கானமிசைக்க நீ
குயிலுக்கு மேலோ
கானமயிலாட்டாம்
கண்டவளும் தானோ

எடையெல்லாம் தடையல்ல
எட்டிப் பறந்தவளே
எழுத வார்த்தையில்லை
உன் இருப்பே கவிதை.

கானமயிலே களிப்பின் சின்னமே
காண கண்கோடி வேண்டுமே
தோகை விரிப்பினிலே
மனம் லயிக்குமே!

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading