கானமயில் -75

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025

பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!

கானமிசைக்க நீ
குயிலுக்கு மேலோ
கானமயிலாட்டாம்
கண்டவளும் தானோ

எடையெல்லாம் தடையல்ல
எட்டிப் பறந்தவளே
எழுத வார்த்தையில்லை
உன் இருப்பே கவிதை.

கானமயிலே களிப்பின் சின்னமே
காண கண்கோடி வேண்டுமே
தோகை விரிப்பினிலே
மனம் லயிக்குமே!

Jeba Sri
Author: Jeba Sri