கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

அனலாக் ஆண்டுகள் நாற்பத்தைந்து..

வசந்தா ஜெகதீசன் .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின் கணக்கிலே தமிழரின்...

Continue reading

கானமயில் -75

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025

பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!

கானமிசைக்க நீ
குயிலுக்கு மேலோ
கானமயிலாட்டாம்
கண்டவளும் தானோ

எடையெல்லாம் தடையல்ல
எட்டிப் பறந்தவளே
எழுத வார்த்தையில்லை
உன் இருப்பே கவிதை.

கானமயிலே களிப்பின் சின்னமே
காண கண்கோடி வேண்டுமே
தோகை விரிப்பினிலே
மனம் லயிக்குமே!

Jeba Sri
Author: Jeba Sri