இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ!
அன்று அனுமன் இட்டதீ
ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ
கானலாய் ஈழத்தைக்
கங்குலில் புதைக்குதே!
ஆணவம் அகந்தையின்
அடங்காப் பசியினால்
தேனெனும் மனிதத்தை
தினமெலாம் கருக்குது!

பூண்டோடு தமிழரைப்
புதைத்திடும் நோக்குடன்
மூட்டிய தீயதாய்
மூசியே எரியுது!
முடிவுரை இன்றியே
முத்திரை பதிக்குது
நாட்டிய இனவெறி
நங்கூரம் பாச்சுது!

மனிதத்தைத் தொலைத்திட்ட
மாக்களின் கரத்திடை
புனிதமாம் ஈழம்
பொசுங்கித் துடிக்குது!
பொறுப்புடை உலகமும்
போக்கற்று நிற்குது!

கீத்தா பரமானந்தன்29-05-23

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading