பதியமிடும் எழுத்தாணிகள்

செல்வி நித்தியானந்தன் பதியமிடும் எழுத்தாணிகள் இருபத்தொன்பது ஆண்டின் பதியம் இமயமே தொட்டிட்ட சான்றின் சரிதம் எழுத்துடன் ஊக்கமும் எண்ணாய் உயரவே எண்ணிடை முதன்மை ஏற்றமாய்.மலரவே ஆக்கமும்...

Continue reading

” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மூண்ட தீ!
அன்று அனுமன் இட்டதீ
ஆண்டாண்டு காலமாய் தொடருந்தீ
கானலாய் ஈழத்தைக்
கங்குலில் புதைக்குதே!
ஆணவம் அகந்தையின்
அடங்காப் பசியினால்
தேனெனும் மனிதத்தை
தினமெலாம் கருக்குது!

பூண்டோடு தமிழரைப்
புதைத்திடும் நோக்குடன்
மூட்டிய தீயதாய்
மூசியே எரியுது!
முடிவுரை இன்றியே
முத்திரை பதிக்குது
நாட்டிய இனவெறி
நங்கூரம் பாச்சுது!

மனிதத்தைத் தொலைத்திட்ட
மாக்களின் கரத்திடை
புனிதமாம் ஈழம்
பொசுங்கித் துடிக்குது!
பொறுப்புடை உலகமும்
போக்கற்று நிற்குது!

கீத்தா பரமானந்தன்29-05-23

Nada Mohan
Author: Nada Mohan