சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகப் பூக்கள்!

எண்ணத்தின் நாற்று
எழுத்தாணி வீச்சு
பன்முகப் படையலாய்ப்
பரவிய ஊற்று

வண்ணக் கதம்பமாய்
வாசனை வீசியே
திண்ணத்தை நிறுத்திய
தேட்டமாம் பதிவு

பாமுகப் பந்தலின்
பதியமாம் ஏடு
பாவை அண்ணா
பதித்த முத்து

வாடா மலரெனும்
வனப்பாம் மிளிர்வு
சூடின ஈர்பத்து
வதனத்தின் களிப்பு

சந்தக் கவியாய்
சிந்திடும் தேனே
தந்தேன் மலர்வாய்
வந்தனம் உனக்கே!

கீத்தா பரமானந்தன்18-01-2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading