சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

பாமுகப் பூக்கள்!

எண்ணத்தின் நாற்று
எழுத்தாணி வீச்சு
பன்முகப் படையலாய்ப்
பரவிய ஊற்று

வண்ணக் கதம்பமாய்
வாசனை வீசியே
திண்ணத்தை நிறுத்திய
தேட்டமாம் பதிவு

பாமுகப் பந்தலின்
பதியமாம் ஏடு
பாவை அண்ணா
பதித்த முத்து

வாடா மலரெனும்
வனப்பாம் மிளிர்வு
சூடின ஈர்பத்து
வதனத்தின் களிப்பு

சந்தக் கவியாய்
சிந்திடும் தேனே
தந்தேன் மலர்வாய்
வந்தனம் உனக்கே!

கீத்தா பரமானந்தன்18-01-2022

Nada Mohan
Author: Nada Mohan