இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
பரவசம்!
மனத்தில் ஊறும் கனிரசமாய்
மயக்கி நிற்கும் பரவசம்
கனக்கும் பொழுதின் சுமைவிரட்டி
காதல் செய்யும் தனிசுகம்!

காலைக் கதிரின் வரவிலும்
கனவுத் தேரின் மலர்விலும்
சோலைக் குயிலின் பாடலிலும்
சொரிந்து தருமே பரவசம்

வண்ணம் சிந்தும் மலரிடை
வண்டு பாடும் மோகனம்
கண்ணில் மின்னும் காதலில்
கலந்து நிற்கும் மதுரசம்!

தாய்மை கொஞ்சும் பரிவிலும்
தாங்கும் தோளின் அணைப்பிலும்
வாய்மை மீறா வாழ்விலும்
வனப்பைச் சிந்தும் புதுசுகம்!

தென்றல் தீண்டும் தழுவலாய்
தினமும் வேண்டும் பரவசம்
வென்று நின்றே வாழ்வதை
வேணு கானம் மீட்டலாம்!

கீத்தா பரமானந்தன்24-01-2021

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading