அமைதியின் முகவடிவமே

மகிழ்ச்சியின் விளைவாக இது உணர்வுகளை கடந்த அறிவின் நிலை அது வெளிப்புற நிகழ்வுகளால் உருவாகாது உள்ளார்ந்த தெளிவால் பிறக்கிறது அமைதியின் முகவடிவமே...

Continue reading

கீத்தா பரமானந்தன்

திமிர்
அடங்கா மனத்தின்
ஆணவ ஆட்டம்
கடமை கண்ணியம்
கருத்தினில் அகற்றி
மடமைத் திரையாய்
மனத்தினை ஆட்டி
விடமாய் எழுந்தே
வீழ்த்திடும் திமிர்!

தானே மேலெனும்
தற்குறி யாகி
மானாய் மயிலாய்
மயக்கும் பிஞ்சும்
ஊனும் உயிரும்
உருக்கி அழித்திட
வீணே எழுந்திடும்
விதண்டா வாதம் திமிர்!

தன்நலம் ஒன்றே
தரணி வாழ்வாய்
உண்ணியாய் ஒட்டி
உருட்டிப் பிரட்டி
எண்ணிய முடிக்கும்
திண்ணிய பாணம் திமிர்!

கீத்தா பரமானந்தன்07-03-2022

Nada Mohan
Author: Nada Mohan