சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஆறு மனமே
சத்தியத்தின் பாதையிலே
சரிவுகள் நிரந்தரமில்லை
வித்தகமாய் எண்ணுகின்ற
வீணரின் கொட்டம்
நிச்சயமாய் அடங்கிவிடும்
நித்திலத்தின் பாடமிது!

நாடிழந்தோம் வீடிழந்தோம்
நாதியற்றுப் போகவில்லை
தேடிய புத்துணர்வால்
தேறுதலாய் அணைக்கின்றோம்
வாடிய மனத்திடையும்
வழிகாட்டித் தொடர்கின்றோம்!

கண்டங் கடந்தாலும்
காத்திரமாய் நிலைத்திட்டே
எண்ணற்ற தளங்களிலே
இளவல்களை நிறுத்திட்டோம்!
பண்பட்ட இனமெனவே
பக்குவமாய் வாழ்கின்றோம்
வீழ்கின்ற நீரே
பெருநதியாய் உலகில்
வென்றிடுவோம் நாமும்
வீழ்தலிலே எழுதலாய்!
ஆறுமனமே ஆறு!

கீத்தா பரமானந்தன்
24-10-23

Nada Mohan
Author: Nada Mohan