சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
ஆறு மனமே
சத்தியத்தின் பாதையிலே
சரிவுகள் நிரந்தரமில்லை
வித்தகமாய் எண்ணுகின்ற
வீணரின் கொட்டம்
நிச்சயமாய் அடங்கிவிடும்
நித்திலத்தின் பாடமிது!

நாடிழந்தோம் வீடிழந்தோம்
நாதியற்றுப் போகவில்லை
தேடிய புத்துணர்வால்
தேறுதலாய் அணைக்கின்றோம்
வாடிய மனத்திடையும்
வழிகாட்டித் தொடர்கின்றோம்!

கண்டங் கடந்தாலும்
காத்திரமாய் நிலைத்திட்டே
எண்ணற்ற தளங்களிலே
இளவல்களை நிறுத்திட்டோம்!
பண்பட்ட இனமெனவே
பக்குவமாய் வாழ்கின்றோம்
வீழ்கின்ற நீரே
பெருநதியாய் உலகில்
வென்றிடுவோம் நாமும்
வீழ்தலிலே எழுதலாய்!
ஆறுமனமே ஆறு!

கீத்தா பரமானந்தன்
24-10-23

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading