19
Feb
விழித்துக்கொட்டிருக்கும்பதே கனவு
வாழ்க்கை அதை புரிய முயலவில்லை
ஆனால் அதன் ஆழத்துள்...
19
Feb
புரிய முயலாதே 1
-
By
- 0 comments
நேற்று என்பது நினைவோடு மட்டும்
நாளை என்பது கற்பனையாக சொட்டும்
உண்மை மட்டும்...
19
Feb
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
அழகு!
பார்க்கும் இடமெங்கும்
பரவசத் துளிர்ப்பு
பாரெங்கும் வாரிடும்
இயற்கையின் சுகிப்பு!
சூரிய சந்திரர்
சுடரிடும் மிளிர்வு
சுந்தரம் சுரந்து
சுற்றுதே பூமி!
விண்ணும் மண்ணும்
விரிகடல் அலையும்
பெண்ணில் தாய்மையும்
பேச்சினில் மழலையும்
திண்ணிய கடமையும்
திறலுடை வீரமும்
எண்ணிய முடிக்கும்
ஏற்றமாம் பாதையும்
வண்ணங்கள் சிந்தியே
வளைத்திடும் எழிலாய்!
மலையில் அருவியும்
மாலை வெயிலும்
சோலைக் குயிலும்
சுகந்த மலர்களும்
காலைத் தழுவும்
கடலின் அலையும்
சொல்லினுள் அடங்காச்
சோபையாய் என்றும்!
கருவினுள் உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும்
அள்ளியே தருகின்ற
அந்தமிலாச் சக்தியும்
எல்லயே காணா
ஏகாந்த அழகாய்!
கீத்தா பரமானந்தன்
29-04-24
Author: Nada Mohan
17
Feb
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
தமிழே...
உயிர்ப்பின் உயிரே
உறவின் இணைப்பே !
அழகு தமிழே
ஆணி வேரே!
மூத்த மொழியே
முத்தமிழ் நயமே!
குமரியில் பூத்தாய்
குவலயம்...
17
Feb
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
17-02-2026
உலக மொழிகளுள் மூத்தவளே
உயிராய் நிமிர்ந்து வளர்பவளே
முச்சங்கம் முதலாய்...
15
Feb
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவிதை இலக்கம் 222
"தமிழ்"
அன்னை தந்தை தந்த மொழி
அமுதினில் இனியது
தமிழ் மொழி
வள்ளுவர்...