28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
அழகு!
பார்க்கும் இடமெங்கும்
பரவசத் துளிர்ப்பு
பாரெங்கும் வாரிடும்
இயற்கையின் சுகிப்பு!
சூரிய சந்திரர்
சுடரிடும் மிளிர்வு
சுந்தரம் சுரந்து
சுற்றுதே பூமி!
விண்ணும் மண்ணும்
விரிகடல் அலையும்
பெண்ணில் தாய்மையும்
பேச்சினில் மழலையும்
திண்ணிய கடமையும்
திறலுடை வீரமும்
எண்ணிய முடிக்கும்
ஏற்றமாம் பாதையும்
வண்ணங்கள் சிந்தியே
வளைத்திடும் எழிலாய்!
மலையில் அருவியும்
மாலை வெயிலும்
சோலைக் குயிலும்
சுகந்த மலர்களும்
காலைத் தழுவும்
கடலின் அலையும்
சொல்லினுள் அடங்காச்
சோபையாய் என்றும்!
கருவினுள் உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும்
அள்ளியே தருகின்ற
அந்தமிலாச் சக்தியும்
எல்லயே காணா
ஏகாந்த அழகாய்!
கீத்தா பரமானந்தன்
29-04-24
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...