30
Jul
30
Jul
நட்பென்றாலே……..
ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026
எங்கிருந்தோ வந்த சொந்தம்
எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம்
இரத்தபந்தம் இல்லாஉறவு
இருளில்...
30
Jul
“நட்பென்றாலே”
நேவிஸ் பிலிப் கவி இல(640)
அன்பிற்கு அடைக்கும் தாழும் இல்ல
அன்பை பிளக்கும் வாளும்...
கீத்தா பரமானந்தன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
அழகு!
பார்க்கும் இடமெங்கும்
பரவசத் துளிர்ப்பு
பாரெங்கும் வாரிடும்
இயற்கையின் சுகிப்பு!
சூரிய சந்திரர்
சுடரிடும் மிளிர்வு
சுந்தரம் சுரந்து
சுற்றுதே பூமி!
விண்ணும் மண்ணும்
விரிகடல் அலையும்
பெண்ணில் தாய்மையும்
பேச்சினில் மழலையும்
திண்ணிய கடமையும்
திறலுடை வீரமும்
எண்ணிய முடிக்கும்
ஏற்றமாம் பாதையும்
வண்ணங்கள் சிந்தியே
வளைத்திடும் எழிலாய்!
மலையில் அருவியும்
மாலை வெயிலும்
சோலைக் குயிலும்
சுகந்த மலர்களும்
காலைத் தழுவும்
கடலின் அலையும்
சொல்லினுள் அடங்காச்
சோபையாய் என்றும்!
கருவினுள் உயிர்க்கும்
கல்லினுள் தேரைக்கும்
அள்ளியே தருகின்ற
அந்தமிலாச் சக்தியும்
எல்லயே காணா
ஏகாந்த அழகாய்!
கீத்தா பரமானந்தன்
29-04-24
Author: Nada Mohan
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...
20
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
21-07-2026.
அமைதி கலைந்த தனிமையில்
அழகிய அந்திப் பொழுதினில்
இதயம் வருடும்...