” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு!
விழிப்பு
களிப்பாகும் ஆயுளுக்கே
கருத்தினிலும் கடமையிலும்
கவனமுடை விழிப்பு வேண்டும்!
இருப்பினைக் காத்திடவும்
இலக்கினை வென்றிடவும்
துருப்பாகி விழிப்புத்தானே
தொய்வற்ற வழிபகரும்!

அஞ்ஞானப் போர்வையிடை
ஆக்கலைப் புதைக்கின்ற
அர்த்த்மற்ற மூடத்தினை
அம்பாகித் தகர்த்திடவே
ஆழக் கடலான
அறிவென்னும் விழிப்பு வேண்டும்!

நெஞ்னிலே ஈரமின்றி
நெருப்பாகிக் கருக்குகின்ற
நீசத்தனம் கொண்டோர்
நித்திலத்தில் நித்தமுமாய்
பொறுப்பாக வென்றிடவே
பெருநிதியே விழிப்புத்தானே!

துளிர்ப்பாகிச் செழித்திட்டே
துருவமென மின்னலிடும்
துவழாத நெஞ்சினையே
தொட்டுவரும் வெற்றியெல்லாம்
துள்ளலிடும் விழிப்புத்தானே!

கீத்தா பரமானந்தன்
06-05-24

Nada Mohan
Author: Nada Mohan