” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

அத்திவாரம்!
சந்தம் சிந்தும் சந்திப்பு!

சித்திகளை நிறைத்திடும்
சீர்தானே அத்திவாரம்!
பத்திரமாய் நிலைத்திடவும்
பரிமளித்துச் செழித்திடவும்
முத்தெனவே பதியமிடும்
முத்திரையாம் அத்திவாரம்!
பலமாகும் அத்திவாரம்
படையலிடும் சரிதங்களை!

பூமியிலே உயிராகப்
பெற்றோர்கள் அத்திவாரம்!
சாமியாக நின்றிட்ட
சந்தணத்தின் சுவாசங்கள்!
நித்தியத்தின் வளர்ச்சியிலே
நிழலாகும் துணையாக
நாள்பார்த்துக் கோள்பார்த்து
நல்கிய சம்சாரம்!

ஆழமுடை அடிக்கல்லாய்
ஆனந்தத்தின் படிக்கல்லாய்
வாழ்வினைத் தோப்பாக்கி
வம்சத்தின் காப்பாக
வரைவான அத்திவாரம்!
ஆயுளின் அத்தியாயம்
ஆட்டமின்றி நகர்த்திட
ஆண்டவன் போடுவான்
அனைத்துக்கும் அத்திவாரம்!

கீத்தா பரமானந்தன்
08-07-24

ப்

Nada Mohan
Author: Nada Mohan