18
Jun
தங்கசாமி தவக்குமார்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் '
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
ஆரோக்கிய வலுவும்
ஆசனங்களும் ''
ஆரோக்கிய வலு நிறைந்த தேகமே
பொருள் பொதிந்த...
18
Jun
ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்
கவிதை 805
உடலை வளைத்தாலே வலிமை பெறும்
உள்ளமும் வளர்ந்து தெளிவு பெறும்...
கீத்தா பரமானந்தன்
ஆசான்!
அறிவெனும் ஒளியை ஏற்ற
அனுதினம் செதுக்கல் செய்தே
நெறியுடை பாதை தன்னை
நெஞ்சினில் பதியஞ் செய்தே
செறுவுடை மனித ராக்கிச்
செழிப்புடன் நிமிர்தி வைக்கும்
பொறுப்புடை ஆசான் தன்னைப்
போற்றியே வணங்கி நிற்போம்!
ஊரவர் பிள்ளை யெல்லாம்
உறவெனக் கூட்டி வைத்தே
ஆரமாய் மிளிர வைக்க
அனுதினம் கரைப்பர் தம்மை!
பாரமாய் எண்ணி டாமல்
பற்றுடன் பாடஞ் சொல்லித்
தாரணி தாங்கும் வண்ணம்
தங்கமாய் மின்னச் செய்வார்!
இருளெனும் மூடம் போக்கி
இலக்குடன் துலங்க வைக்கும்
மருவிலா மேலாம் ஆசான்
மதியதன் ஒளியா யென்றும்!
பெருமையா யெங்கும் உலவும்
பேறினைத் தந்த மேலாம்
குருவுடை ஆசி வேண்டிக்
குறைவிலா மேன்மை காண்போம்!
கீத்தா பரமானந்தன்
Author: Nada Mohan
19
Jun
க.குமரன ( வெற்றி )
தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும்...
19
Jun
“மதிமகன்”
வெற்றி”(359)
எட்டி எட்டிப் பார்க்கும்
எதிரிலும் வந்தும் நிற்கும்
கட்டி அணைக்க போக…
கண்ணாம் பூச்சி காட்டும்!
கிட்டுதென...
19
Jun
சிவரூபன் சர்வேஸ்வரி
செந்தூரப்பூவே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ
செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே//
மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே//
ஒய்யாரமாக ...