” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

மாற்றம் !

தோற்றம் பெற்ற உயிர்கள்
ஏற்றம் பெற்று உயர்ந்திட
வாட்டம் கொண்டு உழைத்து
நாட்டமாய் பெற்றது மாற்றமொன்றே
திருப்தி கொள்ளாத் தேடலில் ஞாலம்
தினமொரு உருவாய் திகழ்ந்திடும் கோலம்
கணமொரு பதிப்பாய் காட்சிகள் ஜாலம்
மனதினை மயக்குது மாயமான் தூலம் !

கணினி யுகமாய் கடுகதி விரைவு
காற்றும் காரும் காலத்தின் பதிவு
மாற்றும் வித்தையில் மனித உணர்வு
வேற்றுக் கிரகமாய் விஞ்ஞான உலகு
பாச அணைப்பு வேசமென்று ஆக்கி
பாட்டனும் பாட்டியும் சுமையென ஒதுக்கி
தோட்டந் துரவில் கட்டிடம் நிறைத்து
தேடிய விதைப்பாய் ஓசோன் அழிப்பு

காலச் சுழற்சியில் கரையும் கணத்தில்
நாளைய உலகிலும் நவயுகத் தோற்றம்
நாமதை உணர்ந்தால் ஏற்றுடும் சூழல்
இல்லையே தள்ளும் பழசாய் ஒதுக்கி
நகர்திடும் மாற்றம் என்றும் மாறதது

கீத்தா பரமானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan