” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும்
சிறுமை கண்டு பொங்குவாய்!
கண்ணில் காணுங் கயமையைக்
கருவில் ஒழித்தல் கடமையாம்
மண்ணில் மனிதம் நிலைக்கவே
மதியில் வேண்டும் உறுதியும்!
எண்ணம் போல வாழ்வினால்
எங்கும் பதர்கள் ஆட்சியாய்
புண்ணில் வேலைப் பாச்சுறார்
புவனம் சகதி ஆக்கிறார்!

மிடிமை கொண்ட பிறவியாம்
மேதினியின் மனிதனே!
அடிமை பட்ட பிறவியாய்
ஆயுள் நீட்டல் வெறுமையாம்!
பொறுமை விட்டு நீயுமே
புத்தி தன்னைத் தீட்டியே
சிறுமை கண்டு பொங்குவாய்
சிலம்பம் ஆடி நசுக்குவாய்!

பாவியரின் செயல்களாற்
பரிதவிப்பில் உலகமும்
பூமி என்னும் பூவனம்
பூக்க வேண்டும் இனிமையை
சாமி ஆகி நீயுமே
சாய்க்க வேண்டும். தீமையை!
காணும் காட்சி யாவிலும்
களிப்பின் மெருகு விரியவே
பாவம் போக்கும் இரட்சனாய்ப்
பாரில் நீயும் உலவுவாய்!

கீத்தா பரமானந்தன்20-01-25

Nada Mohan
Author: Nada Mohan