” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாழ்க்கையெனும் ஓடம்

அலையிடையே படகாய் அனுதினமும் ஓட்டம்
நிலையற்ற கணங்களிடை நித்திய போராட்டம்
விலையற்ற ஆயுளை விதைக்கின்ற நோக்கம்
வலையிடையே மீனாகத் துடித்திடும் வாட்டம்

திசையறியாப் படகாய் தொடர்ந்திடும் பயணம்
விசையாகும் நம்பிக்கை உந்திடும் படகை
பசையாக ஒட்டுவர் பச்சோந்திகள் நடுவில்
அசையாத மனமோ பாறையாய் நிமிரும்

வஞ்சகர் துரோகம் புயலாகி விரட்டும்
அஞ்சிடில் தடுமாற்றம் அகழியாய்ப் புதைக்கும்
கெஞ்சிடும் இதயம் கரையினைத் தேடி
நெஞ்சுரம் ஒன்றே விடிவெள்ளி காணும்

கீத்தா பரமானந்தன்1

Nada Mohan
Author: Nada Mohan