அகத்தினில் இன்பமே

செல்வி நித்தியானந்தன் அகத்தினில் இன்பமே ஆறுவார விடுமுறை ஓடியே சென்றதே ஆளுமை குறைந்து முடங்கிகே போனதே தாயகம் என்றதும் தனக்குள்ளே மகிழ்ச்சி தன்இயல்பு மறந்து தள்ளாடும்...

Continue reading

குறள் தரும் மொழி

வியாழன் கவி 2184!!

குறள் தரும் மொழி..

வல்ல தமிழ் வார்த்தைகளால்
வாரித்தரும் நீதி நெறி
வாழ்ந்தோரின் அறிவுரையாகி
வாழ்வோரை வாழவைக்கும்
இரு வரி தறித்த குறள்
கருத்துக்கள் காவி வரும்
பருவங்கள் பார்த்தே நம்
பாலகரை நல் வழிப்படுத்தும்
நல்லோராய் வாழ்ந்திடவும்
நற்பணிகள் இயற்றிடவும்
வள்ளுவனார் ஈந்த குறள்
இணைத்திடுமே ஓங்கு புகழ்
சொற்கள் ஏழைத் தானிணைத்து
கற்றுத் தருமே பண்பாடு தன்னை
உள்ளந்தோறும் ஒளி தந்து
இல்லந்தன்னை ஒளிர வைக்கும்
எளிமை கொண்ட ஆழப் பொருளை
எம் மனத்தில் பதிய வைக்கும்..

சிவதர்சனி இராகவன்
31/7/2025

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

Continue reading