கெங்கா ஸ்ரான்லி

பள்ளிப்பருவம்
————-
பள்ளிப் பருவம் எமது
கிள்ளைப் பருவம் அது
துள்ளித் திரிந்த காலை
அள்ளிப் பருகும் சோலை
பயமறியாப் பருவத்தில் நாம்
எத்தனை எத்தனை குழப்படி
கடகடவெனப் பேசி
சுடச்சுட பதில் கூறி
விடுவிடுவென நடந்தோம்
சடுகுடு விளையாடியும் மகிழ்ந்தோம்
ஒரு ரூபாவுற்கு ஐஸ் பழம் வாங்க
ஒட்டறை தட்டி பெற்ற நிலை
அதை உறிஞ்சு குடிக்கையில்
அப்படி ஒரு பேரின்பம்
குறும்புகள் செய்யயும் பருவம்
குமுகத்தில் பேச்சும் கிடைக்கும்
பொருட் படுத்தாது புகுந்து விளையாடுவோம்
கல்வி கற்று தேர்ச்சி. பெற்றோம்
கடவுளை வணங்கி ஆசி பெற்றோம்
பெற்றார் சொல் கேட்ட
பிள்ளைகள் நாம்
இன்று நினைத்தால் திரும்பி வராதா
பள்ளிப் பருவம் என்று ஏங்கியபடி!
கெங்கா ஸ்ரான்லி
நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading