” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

பருவம்
————
பருவங்கள் பலவகை
இயற்கையின் பருவம்
உடலின் பருவம்
மனதின் பருவம்
காலங்களின் பருவங்கள் மாறும்
உடல்களின் பருவங்கள் மாறும்
சிசு மழலை, குழந்தை, யெளவனம்,
கன்னி, காளை, , இளையோர்
வயதுப் பரிமாணம்
இது இறைவனின் படைப்பின்
விசித்திரம்
பருவக் கோளாறு
பலதையும் செய்யும்
வருவது பற்றி
சிந்திக்காமல் செய்யும்
கருவிலிருந்து வெளிவந்து
முதிரும் வரை
மளமளவெனப் பருவ மாற்றங்கள்
இயற்கையின் பருவக்காற்று
தென்மேற்றகு பருவக் காற்று
வடமேற்கு பருவக்காற்று
காற்றின் பருவங்களும்
மனித வாழ்வுக்கு தேவையே
இந்தப் பருவங்களுக்குள்
நாமும் இணைந்துள்ளோம்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan