கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
————
ஈழப்போர் என்பது தான்
தமிழரை தலைநிமிர வைத்தது
மொழி பண்பாடு காக்கப் பட்டது
கலைகள் பேணப்பட்டது
தமிழினமும் உயர்ந்தப் பட்டார்கள்
மனிதன் ஒவ்வொருவரும் தனியாளே
இவரை ஒன்றாகச் சேர்த்து
ஒற்றுமையாக வாழ்வது உயர்ச்சியே
தமிழர் ஆண்ட பரம்பரை க் காலம்
முடிந்து விட்டது
வரலாறு தான் மிஞ்சி நிற்கிறது
தமிழரும் தம் தலையில்
மண்ணை வாரியதும் உண்டு
தலைவன் போட்ட விதை
தழைத் தோங்கி வளர்கையில்
தடாலென வெட்டிச் சாய்த்தனர்
தமிழரும் சிதறி ஓடினர்
விடுதலை க்காகப் போராடினர்
விடையின்றி இப்போ தவிக்கின்றனர்
இன்னும் விடுதலை நோக்கியே
விடியுமா எம் தேசம்
என்ற நோக்கில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan