இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
———-
அழியாத கோலங்கள்
————
கோலங்கள் போடுங்கள்
மாக்கோலங்கள் அழகு
எறும்புகளுக்கு விருந்து
என்றுமே கரும்பு
மெல்லினப் பாவை
போட்ட கோலங்கள்
மழையில் நனைந்து
கரைந்து வட்டது
நல்லின மனதில்
நடத்தும் போராட்டம்
வலிதென உள்ளத்தில்
அழியாத கோலங்கள்
எண்ணப்பறவைகள் சிறகடிக்க
வேடனுருவில் வந்து
சிறகொடிக்க
வண்ணக் கனவான
அழகிய கோலங்கள்
சின்னாபின்னமாகி
அழிந்ததும் ஏனோ
கற்பனையில் போட்ட கோலங்கள்
நிஐமாக வேண்டி
கண்ட கனவுகள் நனவானது
அழியாத கோலங்களாய்
அடிமனதில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading