கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
நம்பிக்கை
———-
தும்பிக்கையானிடத்தில் யாரும்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
அம்பிக்கை தான் பணிந்தேத்தினால்
நம்பிக்கை எல்லாம் நிறைவேறும்
நம்பிக்கை தான் வாழ்க்கை
வாழ்க்கை வளமாக அமைய
நடவடிக்கை சரியாக வேண்டும்
சரியாக அமைந்தால் அமோகம் தான்
எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்ற
எடுத்தவை எல்லாம் எதிராய் மாற
நம்பிக்கை அங்கே தோற்றுப் போக
வாழ்வியல் எப்படி வளமாய் மாறும்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan