” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு
நம்பிக்கை
———-
தும்பிக்கையானிடத்தில் யாரும்
நம்பிக்கை வைத்தால் நல்லதே நடக்கும்
அம்பிக்கை தான் பணிந்தேத்தினால்
நம்பிக்கை எல்லாம் நிறைவேறும்
நம்பிக்கை தான் வாழ்க்கை
வாழ்க்கை வளமாக அமைய
நடவடிக்கை சரியாக வேண்டும்
சரியாக அமைந்தால் அமோகம் தான்
எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்ற
எடுத்தவை எல்லாம் எதிராய் மாற
நம்பிக்கை அங்கே தோற்றுப் போக
வாழ்வியல் எப்படி வளமாய் மாறும்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan