சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

கெங்கா ஸ்ரான்லி

வாழ்வு சிறக்கும்

பிறக்கும் போதே
இறப்பும் எழுதப்படும்.
இது இயற்கை விதி.
இறந்தவர் மீண்டும்
எழுவதில்லை.
இதுவும் இயற்கையின் நியதி.
வாழும் போது வாய்மை
தவறாது வாழவேண்டும்.
மீளும் நினைவுகள்
மென்மையுடன் காணவேண்டும்.
மனதிலே வஞ்சினம் வேண்டாம்.
செயவது நல்ல காரியம்,
செயல்பட நல் ஏண்ணம்.
நன்றியுள்ள நாய் கூட
வாலை ஆட்டும் நன்றியுடன்.
நன்றி மறந்தோர் செயல்
மனதை வருத்தும்.
நீயும் நன்றியுள்ள
மனிதனாக வாழக் கற்றுக்கொள்.
வாழ்வும் சிறக்கும்
உனது வாழ்வும் சிறக்கும்.

கெங்கா ஸ்ரான்லி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading