இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தவிப்பு

தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு
மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு
எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு
கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு

உறவுகளைத் தேடியுமே ஊரூராய் அலைகின்றார்
சிறகொடிந்த பறவைகளாய் சினத்துடன் தவித்து
மறக்கவும் முடியாமல் மரணித்தே போகின்றார்
உறக்கம் கலைந்தும் உளமும் தவிப்பில்

மொத்தத்தில் எல்லாமே தவிப்பு தவிப்பு
சித்தங் கலங்காது சிந்தனை சிதறாது
எத்தனை இடர்கள் எமைவந்து மோதினாலும்
அத்துனைத் தவிப்பும் அகன்றிட வாழ்வோமே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading