மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு

தவிப்பு

தண்ணீருக்கு அலைவது தாகத்தின் தவிப்பு
மண்வாசம் இழந்து மகிழ்வுகின்றி யதவிப்பு
எண்ணங்கள் நிறைவேறா ஏக்கத் தவிப்பு
கண்பார்வை இழந்து கலங்கிடும் தவிப்பு

உறவுகளைத் தேடியுமே ஊரூராய் அலைகின்றார்
சிறகொடிந்த பறவைகளாய் சினத்துடன் தவித்து
மறக்கவும் முடியாமல் மரணித்தே போகின்றார்
உறக்கம் கலைந்தும் உளமும் தவிப்பில்

மொத்தத்தில் எல்லாமே தவிப்பு தவிப்பு
சித்தங் கலங்காது சிந்தனை சிதறாது
எத்தனை இடர்கள் எமைவந்து மோதினாலும்
அத்துனைத் தவிப்பும் அகன்றிட வாழ்வோமே…

கோசலா ஞானம்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading